3-வது டெஸ்ட்: இலங்கையைத் தோற்கடித்து பாகிஸ்தான் சாதனை
இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை யூனிஸ் கான் பெற்றார்.
இலங்கைக்கு எதிரான 3-வது டெஸ்ட் போட்டியில் நான்காவது இன்னிங்ஸில் 382 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டுள்ளது பாகிஸ்தான் அணி.
பல்லேகெலேவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியில், நான்காவது இன்னிங்ஸில் 377 ரன்கள் என்கிற இலக்குடன் ஆடத் தொடங்கிய பாகிஸ்தான் அணியில் ஷான் மசூத், யூனிஸ் கான் ஆகியோர் அபாரமாக ஆடி சதம் அடித்தார்கள். 125 ரன்களில் மசூத் அவுட் ஆனாலும் 171 ரன்களுடன் கடைசிவரை ஆட்டமிழக்காமல் அணிக்கு வெற்றியைத் தேடித் தந்தார் யூனிஸ் கான்.
டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிகபட்ச 6-வது சேஸ் இதுவாகும். பாகிஸ்தானின் அதிகபட்ச சேஸும் இதுதான். ஆசிய அளவில் இது இரண்டாவது அதிகபட்ச சேஸ்.
Advertisement
இதன்மூலம் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை 2-1 என வெற்றி பெற்றுள்ளது பாகிஸ்தான் அணி. 2006-க்குப் பிறகு அந்த அணி இப்போதுதான் இலங்கையில் டெஸ்ட் தொடரை வென்றுள்ளது. இதன்மூலம் ஐசிசி தரவரிசைப் பட்டியலில் 3-வது இடத்துக்கு உயர்ந்துள்ளது.
இந்த டெஸ்ட் போட்டியின் ஆட்ட நாயகன் விருதை யூனிஸ் கான் பெற்றார்.
3-வது டெஸ்ட் போட்டி:
இலங்கை 278 (கருணாரத்னே 130, யாசிர் 5-78) மற்றும் 313 (மேத்யூஸ் 122, சண்டிமல் 67, இம்ரான் 5-58)
பாகிஸ்தான் 215 (சர்ஃப்ராஸ் 78*, அசார் 52) மற்றும் 382/3 (யூனிஸ் 171*, மசூத் 125, மிஸ்பா 59*)