இந்திய மகளிர் அணி ஒருநாள் தொடரை வென்றது; திருஷ் காமினி அபாரம்!
இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனை திருஷ் காமினி அபாரமாக ஆடி 62 ரன்கள் எடுத்து...
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையே நடந்த ஐந்தாவது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதனால் 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என வென்றுள்ளது.
பெங்களூரில் நடந்த ஐந்தாவது ஒருநாள் போட்டியில், முதலில் ஆடிய நியூசிலாந்து அணி, 41 ஓவர்களில் 118 ரன்களில் ஆல் அவுட் ஆனது. தொடக்க வீராங்கனை பேட்ஸ் மட்டும் பொறுப்புடன் ஆடி அதிகபட்சமாக 42 ரன்கள் எடுத்தார்.
பிறகு ஆடிய இந்திய அணி, 27.2 ஓவர்களில் இலக்கை எட்டியது. 1 விக்கெட் இழப்புக்கு 121 ரன்கள் எடுத்து 5-வது ஒருநாள் மற்றும் தொடரை வென்றது இந்தியா. இந்திய அணி சார்பில் தொடக்க வீராங்கனை திருஷ் காமினி அபாரமாக ஆடி 62 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.
Advertisement