விளையாட்டு

4-ஆவது ஒருநாள்: பாகிஸ்தானை வென்றது இங்கிலாந்து

DIN


டிரென்ட்பிரிட்ஜ்: நான்காவது ஒருநாள் ஆட்டத்தில் பாகிஸ்தானை 3 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இங்கிலாந்து.

முதலில் ஆடிய பாகிஸ்தான் 50 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 340 ரன்களை குவித்தது. பாபர் ஆஸம் 115, முகமது ஹபீஸ் 59, பாக்கர் ஸமான் 57, ஷோயிப் மாலிக் 47 ரன்களை விளாசினர். இங்கிலாந்து தரப்பில் டாம் கரண் 4-75 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 49.3 ஓவர்களில் 341 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. ஜேஸன் ராய் 114, பென் ஸ்டோக்ஸ் 71, ஜேம்ஸ் வின்ஸ் 43. ஜோ ரூட் 36 ரன்களை விளாசினர். பாகிஸ்தான் தரப்பில் இமாத் வாஸிம் 2-62, முகமது ஹஸ்நைன் 2-80 விக்கெட்டுகளை சாய்த்தனர். இந்த வெற்றி மூலம் தொடரையும் கைப்பற்றியது இங்கிலாந்து. கடைசியாக 5-ஆவது ஒரு நாள் ஆட்டம் சம்பிரதாய ஆட்டமாக நடக்க உள்ளது.

இத்தொடர் உலகக் கோப்பைக்கு இரு அணிகளும் தயாராகும் வகையில் ஏதுவாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்சி - தஞ்சை ரயிலை நாகை வரை நீட்டிக்க வலியுறுத்தல்

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

SCROLL FOR NEXT