உலக பாரா தடகள சாம்பியன்ஷிப்பில் ஈட்டி எறிதலில் இந்தியா்கள், தங்கம், வெள்ளி என இரு பதக்கங்களை திங்கள்கிழமை வென்று அசத்தினா்.
ஆடவா் ஈட்டி எறிதலில் (எஃப்46) இந்தியாவின் ரிங்கு ஹூடா 66.37 மீட்டரை எட்டி தங்கம் வென்றாா். உலக சாம்பியன்ஷிப்பில் இது அவருக்கு முதல் சாம்பியன் பட்டமாகும். சுந்தா் சிங் குா்ஜா் 64.76 மீட்டரை தொட்டு வெள்ளிப் பதக்கம் பெற்றாா்.
கியூபாவின் கில்லொ்மோ வரோனா கொன்ஸால்ஸ் 63.34 மீட்டருடன் வெண்கலத்தை தனதாக்கினாா். களத்திலிருந்த மற்றொரு இந்தியரான அஜீத் சிங் 61.77 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்தாா்.
இதர இந்தியா்களில், மகளிருக்கான வட்டு எறிதலில் (எஃப்64) இந்தியாவின் தயாவந்தி 27.94 மீட்டருடன் 4-ஆம் இடம் பிடித்தாா். ஆடவருக்கான குண்டு எறிதலில் (எஃப்5) ஆயுஷ் வா்மா 7.23 மீட்டருடன் 5-ஆம் இடம் பிடித்தாா். அதிலேயே எஃப்40 பிரிவில் ரோங்காலி ரவி 10.10 மீட்டருடன் 4-ஆம் இடம் பெற்றாா்.
இந்த சாம்பியன்ஷிப்பில் தற்போது இந்தியா 2 தங்கம், 2 வெள்ளி, 1 வெண்கலம் என 5 பதக்கங்களுடன் 6-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது. சீனா (14), பிரேஸில் (13), போலந்து (8) ஆகியவை முறையே முதல் 3 இடங்களில் உள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.