ரோஹித் சர்மா படம் | AP
கிரிக்கெட்

ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும்: இந்திய அணி பயிற்சியாளர்

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் பயிற்சியாளர் தெரிவித்துள்ளார்.

DIN

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி இன்று (டிசம்பர் 26) தொடங்கியது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் விளையாடி வருகிறது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 6 விக்கெட்டுகளை இழந்து 311 ரன்கள் எடுத்துள்ளது.

அபிஷேக் நாயர் கூறுவதென்ன?

முதல் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி வலுவாக உள்ள நிலையில், இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும் என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயர் தெரிவித்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா மீண்டும் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்க வேண்டும். இது குறித்து அணியில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. துரதிருஷ்டவசமாக, ஷுப்மன் கில் விளையாட முடியாத சூழல் உள்ளது. ஷுப்மன் கில் போன்ற இளம் வீரர்கள் முக்கியமான போட்டிகளில் சிறப்பாக விளையாட வேண்டும். அணியின் தேவையை ஷுப்மன் கில் புரிந்துகொள்வார். அதனால் அவர் அணியிலிருந்து நீக்கப்படுவார் எனக் கூறமாட்டேன். ஆனால், அவரது இடத்தில் விளையாடுவதில் மாற்றம் இருக்கலாம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அஞ்சல் துறையில் மாற்றம்: செப்.1 முதல் பதிவு அஞ்சல் அனுப்ப முடியாது!

பெங்களூரில் 13 வயது சிறுவன் எரித்துக் கொலை! காரணம் என்ன?

ஆணவப்படுகொலை செய்யப்பட்ட Kavin உடலுக்கு KN Nehru நேரில் அஞ்சலி!

அரசு கல்லூரிகளில் 574 விரிவுரையாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

டிசம்பரில் இந்தியாவுக்கு வரும் மெஸ்ஸி..! தோனியுடன் விளையாடுகிறாரா?

SCROLL FOR NEXT