ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித், ஹார்திக் விளையாடுவார்களா?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் விளையாடுவார்களா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான டெஸ்ட் போட்டி இன்றுடன் நிறைவடைந்தது. இந்தப் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இரு அணிகளுக்கும் இடையிலான டெஸ்ட் போட்டி நிறைவடைந்துவிட்ட நிலையில், ஒருநாள் தொடர் வருகிற ஜூன் 13 ஆம் தேதி தொடங்குகிறது.
இந்த நிலையில், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா முழு உடல்தகுதியுடன் இருக்கிறார்களா என்பது தெரியவில்லை என இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் சிதான்ஷு கோட்டக் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா முழு உடல்தகுதி பெற்றுவிட்டார்களா என்பது தெரியவில்லை. ஆனால், ஒருநாள் தொடரில் அவர்கள் இருவரும் இருப்பார்கள். அவர்கள் இருவரும் நன்றாக இருப்பதாக கேள்விப்பட்டேன். ஆனால், அவர்கள் உடல்தகுதி சோதனையில் தேர்ச்சி பெற வேண்டும். ஒருநாள் தொடருக்கான பயிற்சியை இந்திய அணி நாளை முதல் தொடங்குகிறது என்றார்.
காயம் காரணமாக ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடர் முழுவதும் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.
Doubts have arisen as to whether both Rohit Sharma and Hardik Pandya will play in the ODI series against Afghanistan.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.