ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகல்!
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரிலிருந்து காயம் காரணமாக இந்திய அணியின் ஆல்ரவுண்டர் ஹார்திக் பாண்டியா விலகியுள்ளார்.
இந்தியா - ஆப்கானிஸ்தான் இடையேயான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் வருகிற ஜூன் 13 ஆம் தேதி முதல் தொடங்குகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான பயிற்சியில் இந்திய வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விளையாடுவதற்கு ரோஹித் சர்மா மற்றும் ஹார்திக் பாண்டியா இருவரும் முழு உடல்தகுதி பெற்றுள்ளதாகக் கூறப்பட்ட நிலையில், காயம் காரணமாக ஒருநாள் தொடரிலிருந்து ஹார்திக் பாண்டியா விலகியுள்ளது இந்திய அணிக்கு பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக பிசிசிஐ தகவலறிந்த வட்டாரங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: ஹார்திக் பாண்டியாவுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. காயம் காரணமாக அடுத்த மூன்று வாரங்களுக்கு கிரிக்கெட் விளையாட முடியாத சூழல் உருவாகியுள்ளது. அதனால், ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் அவர் விளையாட மாட்டார் எனத் தெரிவிக்கபட்டுள்ளது.
காயம் காரணமாக அண்மையில் நிறைவடைந்த ஐபிஎல் தொடரில் ஹார்திக் பாண்டியா சில போட்டிகளில் விளையாடாதது குறிப்பிடத்தக்கது.