முகப்பு
கிரிக்கெட்

என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு... நிதீஷ் குமார் ரெட்டி பேசியதென்ன?

என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு கூறவிரும்புவதாக நிதீஷ் குமார் ரெட்டி பேசியது தொடர்பாக...

Updated On : 29 டிசம்பர் 2024, 6:38 pm IST
நிதீஷ் குமார் ரெட்டி - படம் | AP
பகிர்:

தன்னுடைய டெஸ்ட் போட்டியில் விளையாடும் திறனை சந்தேகப்பட்டவர்களுக்கு, தன்னால் விளையாட முடியும் என நிரூபித்துவிட்டதாக இந்திய அணியின் இளம் வீரர் நிதீஷ் ரெட்டி தெரிவித்துள்ளார்.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டி மெல்போர்னில் நடைபெற்று வருகிறது. போட்டியின் நான்காம் நாள் ஆட்டநேர முடிவில் ஆஸ்திரேலிய அணி அதன் இரண்டாவது இன்னிங்ஸில் 9 விக்கெட்டுகளை இழந்து 228 ரன்கள் எடுத்துள்ளது. இதன் மூலம், இந்திய அணியைக் காட்டிலும் ஆஸ்திரேலியா 333 ரன்கள் முன்னிலை பெற்று வலுவான நிலையில் உள்ளது.

முன்னதாக, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 369 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அந்த அணியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய நிதீஷ் குமார் ரெட்டி சதம் விளாசி அசத்தினார்.

Advertisement

Advertisement

என்னுடைய திறனை சந்தேகப்பட்டவர்களுக்கு...

பாக்ஸிங் டே டெஸ்ட் போட்டியில் சதம் விளாசிய நிதீஷ் ரெட்டி, என்னுடைய திறன் மீது சந்தேகப்பட்டவர்களுக்கு அவர்கள் நினைத்தது தவறு என நிரூபிக்க விரும்பினேன் எனக் கூறியுள்ளார்.

இது தொடர்பாக அவர் பேசியதாவது: சிலர் என் திறன் மீது நம்பிக்கை வைக்கவில்லை. ஐபிஎல் தொடரில் விளையாடிய இளம் வீரர் ஒருவரால், ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மிகப் பெரிய தொடரில் விளையாட முடியுமா என சந்தேகப்பட்டனர். நிறைய பேருக்கு இந்த சந்தேகம் இருந்திருக்கும் என எனக்குத் தெரியும். என்னைப் பற்றிய அவர்களது சந்தேகங்கள் தவறு என்பதை அவர்கள் உணர வேண்டும் என நினைத்தேன். இந்திய அணிக்காக என்னுடைய 100 சதவிகித உழைப்பைக் கொடுப்பதற்காக நான் இங்கு இருக்கிறேன் எனக் கூறிக்கொள்ள விரும்பினேன் என்றார்.

நிதீஷ் ரெட்டி முதல் இன்னிங்ஸில் 189 பந்துகளில் 114 ரன்கள் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments