முகப்பு
கிரிக்கெட்

ஆரஞ்சு ஆர்மியில் இஷான் கிஷன்! ஆனால்.. குறைந்த விலைக்கு ஏலம்!

கடந்த முறை ஐபிஎல் மெகா ஏலத்தைவிட குறைந்த விலைக்கு இஷான் கிஷன் ஏலம்

Updated On : 24 நவம்பர் 2024, 9:19 pm IST
- படம் | இஷான் கிஷன் எக்ஸ் தளம்
பகிர்:

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (எஸ்.ஆர்.ஹெச்) அணியில் புதிய வரவாக இணைந்துள்ளார் இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்காக கடந்த பல ஐபிஎல் சீசன்களில் தொடர்ச்சியாக விளையாடி வந்த இஷான் கிஷன், இன்று(நவ. 24) நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார். அவர் ரூ. 11.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

முன்னதாக, கடந்த 2022-ஆம் ஆண்டு ஐபிஎல் ஏலத்தின்போது அவரை ரூ. 15.25 கோடி தொகைக்கு எடுத்திருந்தது மும்பை அணி. அந்த சீசனில் அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரரும் இவரே. இந்த நிலையில், கடந்த முறை நடைபெற்ற ஐபிஎல் மெகா ஏலத்தைவிட ரூ. 4 கோடி குறைவான தொகைக்கு எடுக்கப்பட்டுள்ளார் இஷான் கிஷன்.

Advertisement

Advertisement

இன்றைய ஐபிஎல் மெகா ஏலத்தில் இஷான் கிஷன் பெயர் அறிவிக்கப்பட்டதும், அவருக்கென நிர்ணயிக்கப்பட்டிருந்த அடிப்படைத் தொகையான ரூ. 2 கோடி கொடுத்து தங்கள் அணிக்காக எடுக்க மும்பை இந்தியன்ஸ் முற்பட்டது. எனினும், ஏலத் தொகை ரூ.3 கோடியை தொட்டதும், மும்பை அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டவில்லை.

இந்த நிலையில், டெல்லி கேபிடல்ஸ்(டிசி) அணி, தங்கள் அணியிலிருந்து விடுபட்டுள்ள இடக்கை ஆட்டக்காரரான ரிஷப் பந்த்க்கு மாற்றாக இஷான் கிஷனை எடுக்க முனைப்பு காட்டியது. அப்போது, இஷன் கிஷனை ஏலத்தில் எடுக்க பஞ்சாப் கிங்ஸ்(பிபிகேஎஸ்) அணிக்கும் டெல்லி அணிக்கும் கடும் போட்டி நிலவியது. ஆனால், இறுதிக்கட்டத்தில் அதிக தொகை கொடுக்க முன் வந்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி, இஷன் கிஷனை தங்கள் வசமாக்கிக் கொண்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments