நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர்: முன்னாள் இந்திய கேப்டன்
தான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தெரிவித்துள்ளார்.
தான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இந்திய அணியின் இளம் வீரர்களில் ஒருவரான இஷான் கிஷன் இரண்டு ஆண்டுகளாக தேசிய அணியில் இடம்பெறாமலிருந்தார். இந்த ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பைத் தொடருக்கு முன்பாக இந்திய அணியில் இஷான் கிஷன் இடம் பிடித்தார்.
உலகக் கோப்பைத் தொடருக்குப் பிறகு, இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் தற்போது விளையாடி வருகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிராக நேற்று (ஜூன் 17) நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் இஷான் கிஷன் சதம் விளாசி அசத்தினார். அவர் அதிரடியாக 79 பந்துகளில் 125 ரன்கள் (14 பவுண்டரிகள், 7 சிக்ஸர்கள்) எடுத்தார்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், டி20 மற்றும் ஒருநாள் போட்டிகள் மட்டுமின்றி டெஸ்ட் போட்டியிலும் இஷான் கிஷனால் நன்றாக விளையாட முடியும் என இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: நான் இஷான் கிஷனின் மிகப் பெரிய ரசிகர். நீண்ட நாள்களாக இந்திய அணியில் இடம்பெறாமலிருந்த அவர், தனது சிறப்பான ஆட்டத்தால் மீண்டும் அணியில் இடம்பெற்றார். அவர் மிகவும் அற்புதமாக விளையாடி வருகிறார். அவருடைய ஆட்டம் எனக்கு மிகவும் பிடிக்கும். இஷான் கிஷன் அனைத்து வடிவிலான போட்டிகளுக்குமான வீரர். அவரால் டெஸ்ட் போட்டியிலும் விளையாட முடியும். துரதிருஷ்டவசமாக, டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியில் அவரை விளையாட வைப்பதற்கு இடமில்லை என்றார்.
வீரர்களுக்கான பிசிசிஐ மத்திய ஒப்பந்தத்தில் இருந்து கடந்த 2024 ஆம் ஆண்டு இஷான் கிஷன் நீக்கப்பட்டதும், அதன் பின் அவர் உள்ளூர் போட்டிகளில் மிகவும் அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி மீண்டும் அணியில் இடம்பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.