முகப்பு
கிரிக்கெட்

லபுஷேனை திட்டமிட்டு வீழ்த்தியது எப்படி? விளக்கிய தெ.ஆ. வீரர்!

மார்னஸ் லபுஷேன் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து...

Updated On : 23 ஆகஸ்ட் 2025, 3:40 pm IST
லபுஷேனை வீழ்த்திய லுங்கி இங்கிடி. - படம்: கிரிக்கெட் ஆஸ்திரேலியா.
பகிர்:

மார்னஸ் லபுஷேனின் விக்கெட்டை திட்டமிட்டு வீழ்த்தியதாக தென்னாப்பிரிக்க வீரர் லுங்கி இங்கிடி தெரிவித்துள்ளார்.

ஆஸி.க்கு எதிரான ஒருநாள் தொடரை 2-0 என தெ.ஆ. அணி வென்றுள்ளது.

டி20 தொடரை 2-1 என ஆஸி. வென்ற நிலையில், அதற்குப் பதிலடியாக ஒருநாள் தொடரை தெ.ஆ. வென்றுள்ளது.

Advertisement

Advertisement

இரண்டாவது ஒருநாள் போட்டியில் தெ.ஆ. 84 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இங்கிடி 5 விக்கெட்டை வீழ்த்தி ஆட்ட நாயகன் விருது வென்றார்.

ஸ்டீவ் ஸ்மித் இல்லாத ஆஸி. அணியின் நம்பிக்கை நட்சத்திரமாக இருக்கும் லபுஷேனை திட்டமிட்டு வீழ்த்தியதாக இங்கிடி கூறியுள்ளார்.

தெ.ஆ. அணிக்கு எதிராக ஆஸி. பேட்டர்களிலே அதிகமான (55.11) சராசரியைக் கொண்டுள்ளவர் மார்னஸ் லபுஷேன். இவரை ஒரே ரன்னில் இங்கிடி வீழ்த்தினார்.

இது குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் பேசியதாவது:

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்தே பார்கிறோம். அவுட்சைட் ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே பந்தினை எடுத்துச் செல்லும்போது அது மிகவும் உபயோகமாக இருக்கிறது.

லபுஷேன் பந்தை சிறப்பாக விட்டு விட்டு ஆடுவார். ஆனால், ஒருநாள் போட்டிகளில் எப்படியும் ரன்கள் அடித்தாக வேண்டும். அதனால் அந்தப் பந்தை வீச வேண்டுமெனத் தோன்றியது.

லபுஷேனுக்கு லைன் மற்றும் லெந்தினை வெளியே இருக்கும்படி எளிமையாக வைத்துக்கொண்டேன். அதற்கு பலன் கிடைத்தது. திட்டமிட்டப்படியே வெற்றியும் கிடைத்தது என்றார்.

summary

Quick revealed Marnus Labuschagne dismissal was the result of a perfectly-executed Protea plan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments