ஆஸி. உடனான முதல் ஒருநாள் போட்டியில் இலங்கை அணி 49 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
முதலில் பேட்டிங் செய்த இலங்கை அணி 46 ஓவர்கள் முடிவில் 214 ரன்கள் மட்டுமே எடுத்தது.
அடுத்து விளையாடிய ஆஸி. 33.5 ஓவர்களில் 165/10 ரன்கள் எடுத்து 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியுற்றது. அதிகபட்சமாக அலெக்ஸ் கேரி 41 ரன்கள் எடுத்தார்.
இலங்கை சார்பில் மகேஷ் தீக்ஷனா 4 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். அசிதா பெர்னாண்டோ, துனித் வெல்லாலகே தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்கள்.
சதமடித்த இலங்கை அணியின் கேப்டன் சரிதா அசலங்கா ஆட்ட நாயகன் விருது பெற்றார்.
2 போட்டிகள் கொண்ட தொடரில் 1-0 என இலங்கை அணி முன்னிலை வகிக்கிறது. அடுத்த போட்டி பிப்.14ஆம் தேதி நடைபெறவிருக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.