முகப்பு
கிரிக்கெட்

ஒருநாள் போட்டிகளில் இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும்: ஸ்மிருதி மந்தனா

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

Updated On : 16 ஜனவரி, 2025 at 12:20 PM
ஸ்மிருதி மந்தனா
பகிர்:

ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு இந்தியாவுக்கு சிறந்த ஆண்டாக மாற வேண்டும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இந்திய அணி அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றி அசத்தியுள்ளது. முன்னதாக, சொந்த மண்ணில் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான ஒருநாள் தொடரையும் இந்திய அணி 3-0 என முழுமையாக கைப்பற்றியது.

ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் இந்த ஆண்டின் பிற்பகுதியில் இந்தியாவில் நடைபெறவுள்ள நிலையில், இந்திய அணி ஒருநாள் போட்டிகளில் மிகவும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

ஸ்மிருதி மந்தனா கூறுவதென்ன?

அயர்லாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை இந்திய அணி முழுமையாகக் கைப்பற்றியுள்ள நிலையில், மேற்கிந்தியத் தீவுகள் மற்றும் அயர்லாந்துக்கு எதிரான தொடர்ச்சியான ஒருநாள் தொடர் வெற்றிகள் உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணி சிறப்பாக செயல்பட உதவும் என இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிசிசிஐ வெளியிட்டுள்ள விடியோவில் அவர் கூறியதாவது: உலகக் கோப்பை நடைபெறவுள்ள ஆண்டில் தொடர்ச்சியாக்க இரண்டு ஒருநாள் தொடர்களை 3-0 என முழுமையாகக் கைப்பற்றியது உண்மையில் சிறப்பானது. ஒருநாள் போட்டிகளில் இந்த ஆண்டு முழுவதையும் இந்திய அணி சிறந்த ஆண்டாக மாற்றி வெற்றி பெற வேண்டும் என்றார்.

அயர்லாந்துக்கு எதிராக நேற்று (ஜனவரி 15) நடைபெற்ற கடைசி ஒருநாள் போட்டியில் இந்திய அணி அபாரமாக விளையாடி முதல் விக்கெட்டுக்கு 233 ரன்கள் சேர்த்தது. கேப்டன் ஸ்மிருதி மந்தனா 135 ரன்களும், பிரதிகா ராவல் 154 ரன்களும் எடுத்தது குறிப்பிடத்தக்கது.

முழு கட்டுரையைப் படிக்க →