ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.
ஐசிசி மகளிர் ஒருநாள் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் வருகிற செப்டம்பர் 30 முதல் தொடங்கவுள்ளது. போட்டிகள் அனைத்தும் இந்தியா மற்றும் இலங்கையில் நடத்தப்படவுள்ளன. செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெறும் தொடரின் முதல் போட்டியில் இந்திய மகளிரணி இலங்கையை எதிர்த்து விளையாடுகிறது.
இலங்கை அணி அறிவிப்பு
விரைவில் ஒருநாள் உலகக் கோப்பைத் தொடர் தொடங்கவுள்ள நிலையில், ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பைத் தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் இன்று (செப்டம்பர் 10) அறிவித்துள்ளது.
15 பேர் கொண்ட அணியை சமாரி அத்தப்பத்து கேப்டனாக வழிநடத்துகிறார்.
ஒருநாள் உலகக் கோப்பை தொடருக்கான இலங்கை அணி விவரம்
சமாரி அத்தப்பத்து (கேப்டன்), ஹாசினி பெரேரா, விஷ்மி குணரத்னே, ஹர்ஷிதா சமரவிக்கிரம, கவிஷா தில்ஹாரி, நிலாக்ஷி டி சில்வா, அனுஷ்கா சஞ்சீவனி (துணைக் கேப்டன்), இமேஷா துலானி, டியூமி விஹங்கா, பியூமி வத்சலா, இனோகா ரனவீரா, சுகந்திகா குமாரி, யுதேசிகா பிரபோதனி, மல்கி மதரா, அச்சினி குலசூர்யா.
இதையும் படிக்க: ஆசியக் கோப்பைக்கான இலங்கை அணியில் மாற்றம்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.