அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன்... வெற்றிக்கான ரகசியம் பகிர்ந்த சஞ்சு சாம்சன்!
ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது...
ஆட்ட நாயகன் விருது வென்ற சஞ்சு சாம்சன், “மனதையும் உடலையும் அடிப்படைக்குக் கொண்டு வர வேண்டும்” எனக் கூறியுள்ளார்.
நேற்றிரவு சேப்பாக்கத்தில் நடைபெற்ற ஐபிஎல் போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சிஎஸ்கே அணி 212/2 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய தில்லி அணி 189 ரன்களுக்கு ஆல் அவுட்டானது
இந்தப் போட்டியில் சிஎஸ்கேவின் தொடக்க வீரர் சஞ்சு சாம்சன் 115* ரன்கள் எடுத்து ஆட்ட நாயகன் விருது வென்றார். விருது வென்ற பிறகு சஞ்சு சாம்சன் பேசியிருப்பதாவது:
Advertisement
நான் அதிகமாக தோல்வியடைந்து இருக்கிறேன். அதிகமாக தோற்பதுதான் எப்படி கம்பேக் தர முடியும் என்பதை கற்றுத்தரும். மனதளவில் ஆட்டத்தின் திட்டத்தை மாற்ற வேண்டுமானால், முதலில் நீங்கள் உடலையும் மனதையும் அடிப்படைக்குக் கொண்டு வர வேண்டும்.
அடிப்படை என்பது மனதளவில் புதிய பகுதி. பந்தை பந்துவீச்சாளர்களின் கையில் இருந்து பார்க்க வேண்டும். பந்தை சரியான நேரத்தில் அடிக்க வேண்டும். இன்று எல்லாமே நல்லதாக நடந்ததுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.