சிஎஸ்கே - குஜராத் டைட்டன்ஸ் இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றிய பிசிசிஐ!
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கான இடங்களை பிசிசிஐ மாற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கான இடங்களை பிசிசிஐ மாற்றியுள்ளது.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுவரை 20 போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில், இன்று நடைபெற்று வரும் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிகளுக்கான இடங்களை மாற்றி ஐபிஎல் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
Advertisement
சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் வருகிற ஏப்ரல் 26 ஆம் தேதி அகமதாபாதிலும், மே 21 ஆம் தேதி சென்னையிலும் விளையாடுவதாக இருந்தது. ஆனால், அகமதாபாதில் நகராட்சி தேர்தல் நடைபெறுவதால் ஏப்ரல் 26 ஆம் தேதி அகமதாபாதில் நடைபெறவிருந்த போட்டி சென்னை சேப்பாக்கம் திடலுக்கு மாற்றப்பட்டுள்ளது. மே 21 ஆம் தேதி சேப்பாக்கத்தில் நடைபெறவிருந்த போட்டி அகமதாபாதுக்கு மாற்றப்பட்டுள்ளது.