பஞ்சாப் கிங்ஸ் அணியின் புதிய சாதனை!
ஐபிஎல் வரலாற்றில் பஞ்சாப் அணி புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஐபிஎல் வரலாற்றில் முதல் 6 போட்டிகளில் தோல்வியைச் சந்திக்காத முதல் அணியாக பஞ்சாப் புதிய சாதனையைப் படைத்துள்ளது.
ஐபிஎல் 2026 தொடரின் 29-ஆவது லீக் சுற்று ஆட்டத்தில் லக்னௌ அணியை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸ் அணி நேற்று (ஏப். 19) இமாலய வெற்றி பெற்றது.
ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அதிரடியாக விளையாடி 7 விக்கெட்கள் இழப்புக்கு 254 ரன்களைக் குவித்தது. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை நடைபெற்ற போட்டிகளில் இதுவே அதிக ரன்களாகும்.
Advertisement
அடுத்து இமாலய இலக்கை விரட்டிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 200 ரன்கள் திரட்டி தோல்வியைத் தழுவியது.
இதன்மூலம், ஐபிஎல் தொடர்களில் முதல் 6 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியை சந்திக்காத அணியாக பஞ்சாப் கிங்ஸ் அணி சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னர், இதே பஞ்சாப் (2014) மற்றும் கொல்கத்தா (2013) அணிகள் முதல் 5 போட்டிகளில் தொடர்ந்து தோல்வியைச் சந்திக்காத நிலையில் இது புதிய சாதனையாகப் பார்க்கப்படுகிறது.
அதுமட்டுமின்றி, முந்தைய போட்டியில் வான்கடே மைதானத்தில் மும்பை அணியை தோற்கடித்த பஞ்சாப் அணி, மும்பைக்கு எதிராக அங்கு ஆடிய 11 போட்டிகளில் 6 முறை வெற்றிபெற்றுள்ளது.
முன்னதாக சென்னை, பெங்களூரு அணிகள் வான்கடே மைதானத்தில் நடைபெற்ற மும்பைக்கு எதிரான 13 போட்டிகளில் 5 வெற்றிகளைப் பெற்றிருந்த நிலையில் அதை பஞ்சாப் முறியடித்தது.
அதுமட்டுமின்றி மும்பை அணிக்கு எதிராக அதிக வெற்றிகளைப் (35 போட்டிகளில் 18 வெற்றி) பெற்ற அணியாக சென்னை அணியின் ( 39 போட்டிகளில் 18 வெற்றி) வெற்றிக் கணக்கை சமன் செய்துள்ளது.