முகப்பு
கிரிக்கெட்

வருத்தமாக இருக்கிறது..! ஐபிஎல் தொடரிலிருந்து வெளியேறிய ஆயுஷ் மாத்ரேவின் பதிவு!

சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரேவின் இன்ஸ்டா பதிவு குறித்து...

Updated On : 22 ஏப்ரல், 2026 at 4:18 PM
ஆயுஷ் மாத்ரே பகிர்ந்த புகைப்படங்கள். - படங்கள்: இன்ஸ்டா / ஆயுஷ் மாத்ரே.
பகிர்:

சிஎஸ்கேவின் இளம் வீரர் ஆயுஷ் மாத்ரே தனது இன்ஸ்டா பக்கத்தில் இந்த சீசனில் இருந்து விலகியது குறித்து மிகவும் வருத்தமாக இருப்பதாகக் கூறியுள்ளார்.

நடப்பு ஐபிஎல் சீசனில் இருந்து காயம் காரணமாக ஆயுஷ் மாத்ரே விலகியுள்ளார். இடது தொடையில் ஏற்பட்ட தசைக் கிழிவினால் அவருக்கு 8-12 வாரங்கள் ஓய்வு தேவைப் படுவதாக மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ளனர்.

சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் ரன் ஓடும்போது ஆயுஷ் மாத்ரேவுக்கு இந்தக் காயம் ஏற்பட்டது. இந்த சீசனில் 6 போட்டிகளில் 201 ரன்களை 177.88 ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி எடுத்துள்ளார்.

Advertisement

சிஎஸ்கே அணி நாளைக்கு மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த நிலையில், ஆயுஷ் மாத்ரே தனது இன்ஸ்டா பக்கத்தில் கூறியிருப்பதாவது:

ஐபிஎல் 2026 சீசனில் சிஎஸ்கே அணிக்காக பங்காற்ற முடியவில்லை என்பது மிகவும் வருத்தமாக இருக்கிறது. ஆனால், நிச்சயமாக, பலமாக திரும்ப வருவேன். இந்த சீசனில் மீதமுள்ள போட்டிகளுக்காக அணிக்கு வாழ்த்துகள். மஞ்சள் நிறத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி எனக் கூறியுள்ளார்.

summary

Ayush Mhatre says disappointment to ruled out of ipl 2026.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.