ஆட்ட நாயகன் விருதை குஜராத் கல்வி அமைச்சருக்கு சமர்ப்பித்த ஜடேஜா..! காரணம் என்ன?
ஆட்ட நாயகன் விருது வென்ற ரவீந்திர ஜடேஜா பேசியிருப்பதாவது...
ராஜஸ்தான் ராயல்ஸ் வீரர் ரவீந்திர ஜடேஜா தனது ஆட்ட நாயகன் விருதை குஜராத் கல்வி அமைச்சருக்குச் சமர்ப்பித்தது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
நேற்றிரவு லக்னௌவில் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 20 ஓவர்களில் 159/6 ரன்கள் எடுத்தது. அடுத்து விளையாடிய லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 18 ஓவர்களில் 119 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா பேட்டிங்கில் 43 ரன்கள் குவித்தார். பந்துவீச்சில் 1 விக்கெட் வீழ்த்தினார். இந்தச் சிறப்பான செயல்பாடுகளால் அவருக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
Advertisement
ஆட்ட நாயகன் விருது வென்ற ஜடேஜா, “ ஆட்ட நாயகன் விருது வென்றது நன்றாக இருக்கிறது. இந்த விருதை குஜராத் கல்வி அமைச்சருக்குச் சமர்ப்பிக்கிறேன். ஏனெனில் நேற்று அவர் என்னிடம் நீங்கள் நன்றாக விளையாடுவீர்கள் எனக் கூறினார். நானும் அதேபோல் இன்று விளையாடினேன்” என்றார்.
குஜராத்தின் கல்வி அமைச்சராக அவரது மனைவி ரவிபா ஜடேஜா பொறுப்பில் இருக்கிறார். குஜராத் முதல்வர் பூபேந்திர படேல் கேபினட்டை மாற்றியமைக்கும்போது ரிவாபாவைதொடக்க, இடைநிலை கல்வி அமைச்சராக மாற்றினார்.
கடந்த 2022 குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் ஜடேஜா தனது மனைவிக்காக பிரசாரம் செய்தார். ஜாம்நகர் வடக்கில் ரவிபா ஜடேஜா வென்றதும் குறிப்பிடத்தக்கது.