முகப்பு
கிரிக்கெட்

வரலாற்றுச் சாதனையில் தமிழன்: கிறிஸ் கெயிலை முந்திய சாய் சுதர்சன்!

ஐபிஎல் வரலாற்றில் புதிய சாதனை நிகழ்த்திய சாய் சுதர்சன் குறித்து...

Updated On : 25 ஏப்ரல், 2026 at 12:37 PM
சதம் அடித்த மகிழ்ச்சியில் சாய் சுதர்சன். - படம்: ஏபி
பகிர்:

ஐபிஎல் வரலாற்றில் கிறிஸ் கெயிலை முந்திய புதிய வரலாற்றுச் சாதனையை சாய் சுதர்சன் நிகழ்த்தியுள்ளார். ஆர்சிபிக்கு எதிரான ஆட்டத்தில் சதம் அடித்து அசத்தினார்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த சாய் சுதர்சன் (24 வயது) ஐபிஎல் தொடரில் அதிவேகமாக 2,000 ரன்களை எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளார்.

குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு விளையாடும் சாய் சுதர்சன் 47 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 2,028 ரன்கள் குவித்துள்ளார். சதம் அடித்து ஆட்டமிழந்து வெளியேறிய சாய் சுதர்சனை அணியின் பயிற்சியாளர் மேத்திவ் ஹைடன் கட்டியணைத்து வாழ்த்தினார்.

Advertisement

இடது கை பேட்டரான சாய் சுதர்சன், அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் போல் அதிரடியாக விளையாடும் வீரராக இல்லாமல் இருந்தாலும், தொடர்ச்சியாக தனது வழக்கமான கிரிக்கெட் பாணியில் விளையாடி கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

நேற்று நடந்த போட்டியில் குஜராத் முதலில் பேட்டிங் செய்து 20 ஓவர்களில் 205/3 ரன்கள் எடுக்க, ஆர்சிபி அணி 18.5 ஓவர்களில் 206/5 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

ஐபிஎல் வரலாற்றில் அதிவேகமாக 2,000 ரன்கள் அடித்தவர்கள்

1. சாய் சுதர்சன் - 47 இன்னிங்ஸ்

2. கிறிஸ் கெயில் - 48 இன்னிங்ஸ்

3. ஷான் மார்ஷ் - 52 இன்னிங்ஸ்

4. ருதுராஜ் கெயிக்வார் - 57 இன்னிங்ஸ்

5. கே.எல். ராகுல் - 60 இன்னிங்ஸ்

summary

Sai sudharsan broke the record of chris gayle in IPL history

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.