ஐபிஎல் வரலாற்றில் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் இவர்களுடையதுதான்: சுரேஷ் ரெய்னா
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் - சாய் சுதர்சனின் பார்ட்னர்ஷிப்தான் ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் என சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
குஜராத் டைட்டன்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஷுப்மன் கில் - சாய் சுதர்சனின் பார்ட்னர்ஷிப்தான் ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, குஜராத் டைட்டன்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியுள்ளன.
தரம்சாலாவில் நாளை (மே 26) நடைபெறும் குவாலிஃபையர் 1 போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதவுள்ளன. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிவிடும்.
Advertisement
Advertisement
இந்த நிலையில், ஷுப்மன் கில் - சாய் சுதர்சனின் பார்ட்னர்ஷிப்தான் ஐபிஎல் வரலாற்றின் மிகச் சிறந்த பார்ட்னர்ஷிப் என இந்திய அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: டாடா ஐபிஎல் வரலாற்றில் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இடையேயான பார்ட்னர்ஷிப்தான் மிகவும் சிறந்தது. இந்த இணை 46 இன்னிங்ஸ்களில் 21 முறை 50-க்கும் அதிகமான ரன்களைக் குவித்துள்ளது. ஷுப்மன் கில் மற்றும் சாய் சுதர்சன் இருவருக்கும் ஆட்டம் குறித்த புரிதல் மிகவும் நன்றாக இருக்கிறது. இந்த இணை தொடர்ச்சியாக ரன்கள் குவிக்கிறது. குறைந்த அளவிலான டாட் பந்துகளை இவர்கள் விளையாடியுள்ளனர். சரியான பந்துவீச்சாளர்களை தேர்வு செய்து அவர்களுக்கு எதிராக இந்த இணை அதிரடியாக ரன்கள் குவிக்கிறது. இருவருமே மிகவும் சிறப்பான உடல் தகுதியை பெற்றுள்ளனர் என்றார்.
ஐபிஎல் தொடரில் ஷுப்மன் கில் - சாய் சுதர்சன் இணைக்கு அடுத்தபடியாக, கிறிஸ் கெயில் - விராட் கோலி இணை உள்ளது. அதனைத் தொடர்ந்து, டி வில்லியர்ஸ் - விராட் கோலி இணை மூன்றாவது இடத்தில் உள்ளது. 21 முறை 50 ரன்களுக்கும் அதிகமாக பார்ட்னர்ஷிப் அமைக்க கெயில் - கோலி இணை 59 இன்னிங்ஸ்களும், டி வில்லியர்ஸ் - கோலி இணை 76 இன்னிங்ஸ்களும் எடுத்துக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.