ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் நிகழ்த்திய சாதனை!
ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் நிகழ்த்திய சாதனை குறித்து...
ஐபிஎல் பிளே - ஆஃப்ஸ் வரலாற்றில் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
நேற்றிரவு நடந்த குவாலிஃபயர் 2 போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் ராயல்ஸ் 20 ஓவர்களில் 214/6 ரன்கள் குவிக்க, குஜராத் டைட்டன்ஸ் 18.4 ஓவர்களில் 219/3 ரன்கள் எடுத்து வென்றது.
இந்தப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஷுபம்ன் கில் 53 பந்துகளில் 104 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில் 15 பவுண்டரிகள், 3 சிக்ஸர்கள் அடங்கும். இந்தப் போட்டியில் ஆட்ட நாயகன் விருது வென்றும் அசத்தினார்.
Advertisement
Advertisement
பிளே ஆப்ஸ் வரலாற்றிலேயே சிஎஸ்கேவின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாதான் அதிக ரன்கள் (714) குவித்து முதலிடத்தில் இருக்கிறார். தற்போது, ஷுப்மன் கில் இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.
முன்னதாக 2023 குவாலிஃபயர் 2 போட்டியிலும் ஷுபம்ன் கில் சதம் அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது, இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ள குஜராத் அணி ஆர்சிபியுடன் ஞாயிற்றுக்கிழமை (மே.31) மோதவிருக்கிறது.