இரட்டைச் சதத்தைத் தவறவிட்ட ஷுப்மன் கில்: 402 ரன்களைக் குவித்து இந்தியா சாதனை!
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 402 ரன்கள் குவித்த இந்தியாவின் பேட்டிங் குறித்து...
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 49.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 402 ரன்கள் குவித்து சாதனை படைத்துள்ளது.
சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் இதுவரை 400க்கும் அதிகமான ரன்களைக் குவித்த அணியாக தென்னாப்பிரிக்காவுடன் இந்தியாவும் இணைந்துள்ளது. இரு அணிகளுமே எட்டு முறை இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது.
லக்னௌவில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டியில் ஆபகானிஸ்தான் டாஸ் வென்று பந்துவீச்சைத் தேர்வு செய்தது. தொடக்க வீரர் ஜெய்ஸ்வால் 4, ரோஹித் சர்மா 48 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்கள்.
Advertisement
Advertisement
கேப்டன் ஷுப்மன் கில், இஷான் கிஷன் இணைந்து அதிரடியான பார்ட்னர்ஷிப்பை அமைத்தார்கள். இருவருமே சதம் அடித்து அசத்தினார்கள். இந்தப் போட்டியில் 96/2 ரன்னிலிருந்து 320/3 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.
இஷான் கிஷன் 125 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஷுப்மன் கில் 154 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இரட்டைச் சதம் அடிப்பார் என எதிர்பார்த்த நிலையில் 154 ரன்களுக்கே ஆட்டமிழந்தார்.
கடைசி கட்ட பேட்டர்கள் சொற்ப ரன்களே எடுத்தார்கள். வங்கதேசம் சார்பில் நங்கேயாலியா கரோட்டி 4 விக்கெட்டுகளும், ரஷித் கான் 3 விக்கெட்டுகளும் எடுத்து அசத்தினார்கள்.
டெஸ்ட் போட்டியில் (1-0) வென்ற இந்திய அணி ஒருநாள் தொடரிலும் 1-0 என முன்னிலை வகிக்கிறது. இந்தப் போட்டியில் வென்றால் 2-0 என ஒருநாள் தொடரையும் கைப்பற்றும் என்பது குறிப்பிடத்தக்கது.