முகப்பு
கிரிக்கெட்

தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!

இந்திய மகளிரணியின் அசத்தல் வெற்றி குறித்து...

Updated On : 26 ஏப்ரல் 2026, 11:18 am IST
தீப்தி சர்மா - படம்: எக்ஸ் / பிசிசிஐவுமன்.
பகிர்:

தென்னாப்பிரிக்க மகளிரணிக்கு எதிரான நான்காவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.

இந்திய மகளிரணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஏற்கெனவே, தொடரை இழந்த இந்திய அணிக்கு 3-1 என ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.

ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா 43, தீப்தி சர்மா 36, ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார்கள்.

Advertisement

Advertisement

அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 171/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் பந்துவீச்சில் முதல்முறையாக தனது 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.

பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய தீப்தி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது கிடைத்தது. கடைசி டி20 போட்டி நாளை (ஏப்.27) பெனோனியில் வில்லோமூர் பார்க்கில் நடைபெற இருக்கிறது.

summary

All-round Deepti Sharma grabs maiden T20I fifer to carry India to 14-run over SA

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments