தீப்தி சர்மா முதல்முறையாக 5 விக்கெட்டுகள்: இந்தியாவுக்கு ஆறுதல் வெற்றி!
இந்திய மகளிரணியின் அசத்தல் வெற்றி குறித்து...
தென்னாப்பிரிக்க மகளிரணிக்கு எதிரான நான்காவது டி20 ஆட்டத்தில் இந்திய மகளிரணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய மகளிரணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாட தென்னாப்பிரிக்காவுக்குச் சுற்றுப்பயணம் செய்துள்ளது. ஏற்கெனவே, தொடரை இழந்த இந்திய அணிக்கு 3-1 என ஆறுதல் வெற்றி கிடைத்துள்ளது.
ஜோகன்னஸ்பர்கில் நடைபெற்ற இந்த நான்காவது போட்டியில் டாஸ் வென்ற தெ.ஆ. அணி பந்துவீசியது. முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 20 ஓவர்களில் 185/5 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக ஜெமிமா 43, தீப்தி சர்மா 36, ரிச்சா கோஷ் 34 ரன்கள் எடுத்தார்கள்.
Advertisement
அடுத்து விளையாடிய தெ.ஆ. அணி 20 ஓவர்களில் 171/9 ரன்கள் எடுத்து தோல்வியுற்றது. இந்தப் போட்டியில் இந்தியாவின் ஆல்ரவுண்டர் பந்துவீச்சில் முதல்முறையாக தனது 5 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார்.
பேட்டிங், பந்துவீச்சு என அசத்திய தீப்தி சர்மாவுக்கு ஆட்ட நாயகி விருது கிடைத்தது. கடைசி டி20 போட்டி நாளை (ஏப்.27) பெனோனியில் வில்லோமூர் பார்க்கில் நடைபெற இருக்கிறது.