ரியான் பராக்கின் பேட்டிங்கில் தவறில்லை, வலுவாக மீண்டு வருவார்: விக்ரம் ரத்தோர்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை என அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அனைத்து அணிகளும் ஏழு போட்டிகளில் விளையாடியுள்ளன. சில அணிகள் எட்டுப் போட்டிகளில் விளையாடியுள்ளன. புள்ளிப்பட்டியலில் பஞ்சாப் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் முதல் நான்கு இடங்களில் உள்ளன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி சிறப்பாக விளையாடி புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களில் இருந்தாலும், அந்த அணியின் கேப்டன் ரியான் பராக் பெரிதாக ரன்கள் குவிக்கவில்லை. நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 8 போட்டிகளில் விளையாடியுள்ள ரியான் பராக், வெறும் 88 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார்.
Advertisement
இந்த நிலையில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை எனவும், அவர் வலுவாக மீண்டு வருவார் எனவும் அந்த அணியின் பேட்டிங் பயிற்சியாளர் விக்ரம் ரத்தோர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ரியான் பராக்கின் பேட்டிங்கில் எந்தவொரு தவறும் இல்லை. வலைப்பயிற்சியில் அவர் நன்றாக பேட்டிங் செய்கிறார். அவர் மிகவும் கடினமாக உழைக்கிறார். சில நேரங்களில் வீரர்கள் இதுபோன்ற காலக் கட்டத்தை கடந்து வர வேண்டியிருக்கும். கிரிக்கெட்டில் இது இயல்பான ஒன்றுதான் என நினைக்கிறேன். ரியான் பராக் வலுவாக மீண்டு வருவார். அதில் நான் உறுதியாக இருக்கிறேன் என்றார்.