முத்தரப்பு தொடர்: இந்திய அணியில் ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் கெய்க்வாட்!
இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் முத்தரப்புத் தொடருக்கான இந்திய ஏ அணியில் காயம் காரணமாக ரியான் பராக் வெளியேறினார்.
இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் அணிகள் விளையாடும் முத்தரப்புத் தொடருக்கான இந்திய ஏ அணியில் காயம் காரணமாக ரியான் பராக் வெளியேறினார்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான ரியான் பராக் தொடைப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக மருத்துவ சிகிச்சையில் உள்ளார். 3 மாத காலம் அவர் கிரிக்கெட்டிலிருந்து விலகி ஓய்வெடுக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனான ருதுராஜ் கெய்க்வாட் இந்திய ஏ அணியில் இணைந்துள்ளார்.
Advertisement
Advertisement
இந்தியா, இலங்கை, ஆஃப்கானிஸ்தான் ஆகிய நாடுகளின் ஏ வகைமை அணிகள் விளையாடும் முத்தரப்பு கிரிக்கெட் தொடர் வருகிற ஜூன் 9 அன்று தொடங்குகின்றது. இந்த நிலையில், ருதுராஜ் கெய்க்வாட் மாற்று வீரராக சேர்க்கப்பட்டுள்ளதை பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முத்தரப்பு கிரிக்கெட் தொடருக்கான இந்திய ஏ அணியில் விளையாடும் வீரர்கள்:
திலக் வர்மா (கேப்டன்), ருதுராஜ் கெய்க்வாட் (துணை கேப்டன்), பிரியன்ஷ் ஆர்யா, வைபவ் சூர்யவன்ஷி, ஆயுஷ் பதோனி, நிஷாந்த் சிந்து, சூர்யன்ஷ் ஷெட்ஜே, பிரப்சிம்ரன் சிக், குமார் குஷாக்ரா, விபிராஜ் நிகம், யாஷ் தாக்கூர், யுத்வீர் சிங், அன்சூல் கம்போஜ், அர்ஷத் கான், அங்குல் ராய்.
Tri-Nation Cricket Series: Ruturaj Gaikwad Replaces Riyan Parag in Indian Squad
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.