கடைசி டி20: வங்கதேசத்தை வீழ்த்தி தொடரை சமன் செய்த நியூசிலாந்து!
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசத்துக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் நியூசிலாந்து அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
வங்கதேசம் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது மற்றும் கடைசி டி20 போட்டி டாக்காவில் இன்று (மே 2) நடைபெற்றது. இந்தப் போட்டியில் நியூசிலாந்து அணி டக்வொர்த் லீவிஸ் விதிப்படி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இரு அணிகளுக்கும் இடையிலான இந்த ஆட்டம் மழை காரணமாக 15 ஓவர்களாக குறைத்து நடத்தப்பட்டது. முதலில் விளையாடிய வங்கதேசம் 14.2 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆட்டமிழந்தது.
Advertisement
Advertisement
அந்த அணியில் அதிகபட்சமாக தௌஹித் ஹிரிடாய் 33 ரன்களும், கேப்டன் லிட்டன் தாஸ் 26 ரன்களும் எடுத்தனர். சைஃப் ஹாசன் 16 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர்.
நியூசிலாந்து தரப்பில் அபார பந்துவீச்சை வெளிப்படுத்திய ஜோஷ் கிளார்க்சன் மூன்று விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார். நாதன் ஸ்மித் மற்றும் பென் சியர்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளையும், ஜேடன் லென்னாக்ஸ் மற்றும் ஈஷ் சோதி தலா ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
பெவான் ஜேக்கோப்ஸ் அரைசதம்; டி20 தொடரை சமன் செய்த நியூசிலாந்து!
103 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நோக்கி களமிறங்கிய நியூசிலாந்து அணி, 11.4 ஓவர்களில் இலக்கை எட்டி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது.
நியூசிலாந்து அணியில் அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெவான் ஜேக்கோப்ஸ் அதிகபட்சமாக 31 பந்துகளில் 62 ரன்கள் எடுத்து கடைசி வரை களத்தில் இருந்தார். அதில் 5 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்கள் அடங்கும். அவரைத் தொடர்ந்து, டிம் ராபின்சன் 23 ரன்களும், டீன் ஃபாக்ஸ்கிராஃப்ட் 15 ரன்களும் எடுத்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஷோரிஃபுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளையும், மஹேதி ஹாசன் ஒரு விக்கெட்டினையும் கைப்பற்றினர்.
இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை நியூசிலாந்து அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.
New Zealand won the third T20 match against Bangladesh by 6 wickets.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.