பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி? க்ருணால் பாண்டியா பதில்!
ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளார்.
ஐபிஎல் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஐபிஎல் தொடரில் லக்னௌவில் இன்று (மே 7) நடைபெறும் 50-வது போட்டியில் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் விளையாடுகின்றன.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரில் பேட்டர்களின் சவாலை சமாளிப்பது எப்படி என்பது குறித்து ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் ஆல்ரவுண்டர் க்ருணால் பாண்டியா பேசியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
Advertisement
Advertisement
இது தொடர்பாக அவர் பேசியதாவது: ஐபிஎல் தொடரை உற்றுக் கவனித்திருந்தால் கடந்த 10 ஆண்டுகளில் பேட்டர்கள் பந்தை அடித்து விளையாடும் விதம் பெரிய அளவில் மாறியிருப்பதை கவனித்திருக்கலாம். பேட்டர்கள் அதிரடியாக விளையாடும் விதம் அதிகரித்துள்ளது. ஐபிஎல் தொடரில் புதிதாக அறிமுகமாகும் வீரர்கள் மிகவும் எளிதாக பவுண்டரிகள் மற்றும் சிக்ஸர்கள் விளாசுகிறார்கள். அதனால், பந்துவீச்சாளர்கள் அவர்களது பந்துவீச்சில் நிறைய வித்தியாசமான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது.
பேட்டர்களைக் காட்டிலும் பந்துவீச்சாளர்கள் ஒருபடி அதிகமாக சிந்திக்க வேண்டிய இடத்தில் இருக்கிறார்கள். அதன் காரணமாகவே, என்னுடைய பந்துவீச்சில் பௌன்சர்கள் மற்றும் யார்க்கர்களை உங்களால் பார்க்க முடிகிறது. என்னுடைய பந்துவீச்சில் ஒரே நாளில் திடீரென மாற்றங்களை கொண்டு வந்துவிடவில்லை என்றார்.
Royal Challengers Bangalore all-rounder Krunal Pandya has spoken about how to tackle the challenge posed by batters in the IPL.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.