4 ஓவர்கள் வீச 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன்: கேமரூன் கிரீன்
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 ஓவர்கள் முழுவதுமாக வீசத் தயாராக இருப்பதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 ஓவர்கள் முழுவதுமாக வீசத் தயாராக இருப்பதாக கேமரூன் கிரீன் தெரிவித்துள்ளார்.
ஐபில் தொடரின் 19-வது சீசன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. பிளே ஆஃப் சுற்றுக்கான போட்டியில் அனைத்து அணிகளும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகின்றன. தொடரின் ஆரம்பத்தில் தோல்விகளால் திணறிய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தற்போது வெற்றிகளைப் பதிவு செய்து வருகிறது.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆஸ்திரேலிய அணியின் ஆல்ரவுண்டரான கேமரூன் கிரீனை ரூ. 25.20 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், ஆரம்பக் கட்டப் போட்டிகளில் அவர் பந்துவீச்சில் ஈடுபடாதது பேசுபொருளானது. கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஈடுபடாதது குறித்த கேள்விக்கு அதனை நீங்கள் ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியத்திடம்தான் கேட்க வேண்டும் என கேப்டன் அஜிங்க்யா ரஹானே பதிலளித்திருந்தார். அதன் பின், ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்தது, கேமரூன் கிரீன் பந்துவீச்சில் ஈடுபட்டது எனப் பல நிகழ்வுகள் அரங்கேறின.
Advertisement
இந்த நிலையில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக 4 ஓவர்கள் முழுவதும் வீசவும், எந்த இடத்திலும் களமிறங்கி விளையாடவும் 100 சதவிகிதம் தயாராக இருப்பதாகவும் கேமரூன் கிரீன் கூறியுள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
இது தொடர்பாக அவர் பேசியதாவது: 4 ஓவர்கள் முழுமையாக வீசுவதற்கு நான் 100 சதவிகிதம் தயாராக இருக்கிறேன். அணிக்காக அனுகுல் ராய் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். அவர் ஒன்று அல்லது இரண்டு ஓவர்கள் வீசுகிறார். அதனால், என்னால் இரண்டு அல்லது மூன்று ஓவர்கள் மட்டுமே வீச முடிகிறது.
நானும் அனுகுல் ராயும் அணியில் ஆல்ரவுண்டர்களாக இருக்கிறோம். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணிக்கு மிகவும் உதவியாக இருக்கிறார். நாங்கள் இருவரும் இணைந்து அணிக்காக நான்கு ஓவர்கள் வீசுகிறோம். எங்கள் அணியின் பேட்டிங் காம்பினேஷனை கண்டறிய சில போட்டிகள் ஆகிவிட்டது. அணிக்காக எந்த இடத்தில் களமிறங்கி விளையாடவும் தயாராக இருக்கிறேன். இப்போது அணி மிகவும் சிறப்பாக அமைந்துள்ளது என்றார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் 10 போட்டிகளில் விளையாடியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 4 வெற்றிகளுடன் புள்ளிப்பட்டியலில் 7-வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது.