பிளே ஆஃப் போட்டியிலிருந்து வெளியேறிய லக்னௌ, மும்பை; விறுவிறுப்பாகும் ஐபிஎல் தொடர்!
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறுவதற்கான போட்டியிலிருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறின.
ஐபிஎல் தொடரில் பிளே ஆஃப் சுற்றுக்குக்கு முன்னேறுவதற்கான போட்டியிலிருந்து லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் வெளியேறின.
ஐபிஎல் தொடரில் நேற்று (மே 10) சென்னை சேப்பாக்கம் திடலில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும், ராய்பூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியும் நடைபெற்றது.
அதில், முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும், இரண்டாவது போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி மும்பை இந்தியன்ஸை 2 விக்கெட்டுகள் வித்தியாசத்திலும் வீழ்த்தி அசத்தின.
Advertisement
நேற்றையப் போட்டியில் தோல்வியடைந்தன் மூலம், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து வெளியேறின. இதுவரை தலா 11 போட்டிகளில் விளையாடியுள்ள லக்னௌ மற்றும் மும்பை அணிகள் தலா 3 வெற்றிகள் பெற்றுள்ளன. புள்ளிப்பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 9-வது இடத்திலும், லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 10-வது இடத்திலும் உள்ளன.
பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான போட்டியிலிருந்து லக்னௌ மற்றும் மும்பை அணிகள் வெளியேற்றப்பட்டுவிட்ட நிலையில், பிளே ஆஃப் சுற்றுக்குத் தகுதி பெற மற்ற அணிகளுக்குள் கடும் போட்டி நிலவுவது குறிப்பிடத்தக்கது.