கிறிஸ் கெயில் சாதனையை முறியடிப்பாரா வைபவ் சூர்யவன்ஷி?
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் வைபவ் சூர்யவன்ஷி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
ஐபிஎல் தொடரில் அதிரடியாக விளையாடி வரும் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயிலின் சாதனையை முறியடிப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.
நடப்பு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தொடர்ச்சியாக அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தி ரன்கள் குவித்து வருகிறார். சர்வதேச அளவில் மிகவும் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களுக்கு எதிராக துளியும் அச்சமின்றி அவர் அதிரடியாக விளையாடி ரன்கள் குவிக்கிறார்.
நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை 13 போட்டிகளில் விளையாடியுள்ள வைபவ் சூர்யவன்ஷி, 579 ரன்கள் எடுத்து அதிக ரன்கள் குவித்தவர்கள் பட்டியலில் 4-வது இடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு அதிகம் வாய்ப்பிருப்பதால், அதிக ரன்கள் குவித்து ஆரஞ்சு தொப்பியை வெல்வதற்கு சூர்யவன்ஷிக்கு அதிக வாய்ப்பிருக்கிறது.
Advertisement
Advertisement
இந்த ஐபிஎல் தொடரில் இதுவரை வைபவ் சூர்யவன்ஷி 53 சிக்ஸர்கள் விளாசியுள்ளார். ஐபிஎல் தொடர் ஒன்றில் அதிக சிக்ஸர்கள் விளாசிய வீரர் என்ற சாதனையை மேற்கிந்தியத் தீவுகள் அணியின் முன்னாள் வீரர் கிறிஸ் கெயில் தன்வசம் வைத்துள்ளார். ஐபிஎல் சீசன் ஒன்றில் அவர் 59 சிக்ஸர்கள் விளாசி சாதனை படைத்துள்ளார். கிறிஸ் கெயிலின் இந்த சாதனையை முறியடிக்க வைபவ் சூர்யவன்ஷிக்கு இன்னும் 7 சிக்ஸர்கள் மட்டுமே தேவைப்படுகின்றன.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதன் கடைசி லீக் ஆட்டத்தில் நாளை (மே 24) மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்ளவுள்ளது குறிப்பிடத்தக்கது.