ஐபிஎல்

ஐபிஎல் போட்டியில் ஆரஞ்சு தொப்பி யார் வசம்?: மூன்று வீரர்களிடையே கடும் போட்டி!

DIN

ஐபிஎல் போட்டியில் அதிக ரன்கள் எடுப்பதில் கே.எல். ராகுல், ருதுராஜ், டு பிளெஸ்சிஸ் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

பஞ்சாப் அணிக்கு எதிரான கடைசி லீக் ஆட்டத்தில் சிஎஸ்கே அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்துள்ளது. ருதுராஜ் 12, டு பிளெஸ்சிஸ் 76, ஜடேஜா 15 ரன்கள் எடுத்தார்கள். 

இந்த ஆட்டம் தொடங்கும்போது அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் கே.எல். ராகுல் முதலிடத்தில் இருந்தார். இதனால் ஆரஞ்சு தொப்பி அவர் வசம் இருந்தது. ருதுராஜ் தனது இன்னிங்ஸின்போது அதிக ரன்கள் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறினார். டு பிளெஸ்சிஸ் விடுவாரா? அடுத்து அவர் 76 ரன்கள் எடுத்து முதலிடம் பெற்று ஆரஞ்சு தொப்பியை ருதுராஜிடமிருந்து தட்டிச் சென்றார். 

சிஎஸ்கே இன்னிங்ஸின் முடிவில் டுபிளெஸ்சிஸ் 546 ரன்களுடன் முதலிடத்தில் உள்ளார்.

ஐபிஎல் 2021: அதிக ரன்கள்

1. டுபிளெஸ்சிஸ் - 546 ரன்கள்
2. ருதுராஜ் - 533 ரன்கள்
3. ராகுல் - 529 ரன்கள் 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீ செல்லியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

ஸ்ரீ கஜேந்திர வரதராஜப் பெருமாள் கோயில் வைகாசி பிரம்மோற்சவம்

மீன்கள் விலை உயா்வு: விற்பனையும் அமோகம்

நாட்டறம்பள்ளி வரதராஜப் பெருமாள் கோயில் கும்பாபிஷேம்

கெளரவிப்பு...

SCROLL FOR NEXT