கிரிக்கெட் ரசிகர்கள் கவனிக்க... ஐபிஎல் ப்ளே-ஆஃப் போட்டி டிக்கெட் விற்பனை நாளை தொடக்கம்!
ஐபிஎல் தொடரின் ப்ளே-ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 20) தொடங்கும் என பிசிசிஐ அறிவித்துள்ளதைப் பற்றி...
ஐபிஎல் தொடரின் ப்ளே ஆஃப் போட்டிகளுக்கான டிக்கெட் விற்பனை நாளை (மே 20) தொடங்கும் என இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) அறிவித்துள்ளது.
இந்தியன் பிரீமியர் லீக் தொடர் இந்தியா முழுவதும் உள்ள 14 நகரங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், மும்பை, லக்னௌ அணிகள் தொடரில் இருந்து வெளியேறிவிட்டன.
நடப்பு சாம்பியனான பெங்களூரு அணி முதல் அணியாக பிளே-ஆஃப் சுற்றில் அடியெடுத்து வைத்துள்ள நிலையில், இரண்டாவது அணியாக ஹைதராபாத் அணி தேர்வாகியிருக்கிறது.
Advertisement
Advertisement
மூன்றாவது மற்றும் நான்காவது இடத்துக்கு பஞ்சாப், குஜராத் அணிகள் கடுமையாக மோதும் நிலையில், நேற்றிரவு நடைபெற்ற ஹைதராபாத்துக்கு எதிரான போட்டியில் தோல்வியைத் தழுவியதன் மூலம் சென்னை அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு மங்கியிருக்கிறது.
இந்த நிலையில், ஐபிஎல் தொடரின் பிளே-ஆஃப் சுற்றுக்கான டிக்கெட் விற்பனை குறித்த அறிவிப்புகளை பிசிசிஐ நிர்வாகம் வெளியிட்டுள்ளது.
பிளே-ஆஃப் தொடருக்கான டிக்கெட்டுகள் நாளை இரவு 7 மணிக்குத் தொடங்கும் என்றும், டிஸ்ட்ரிக் செயலி மூலமாக டிக்கெட்டுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குவாலிஃபையர் 1 போட்டி – மே 26 ஆம் தேதி தரம்சலாவிலும், எலிமினேட்டர் 1 போட்டி மே 27 ஆம் தேதி நியூ சண்டீகரிலும் நடைபெறுகிறது.
குவாலிஃபையர் 1, எலிமினேட்டர் 1 போட்டிக்கான டிக்கெட்டுகள் வரும் 20, 21 ஆம் தேதிகளிலும், குவாலிஃபையர் 2, இறுதிப்போட்டிக்கான டிக்கெட்டுகள் 22, 23 ஆம் தேதிகளில் https://www.iplt20.com உள்ளிட்ட தளங்களில் பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The Board of Control for Cricket in India (BCCI) on Monday announced the ticket sale schedule for the TATA Indian Premier League (IPL) 2026 Playoffs.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.