ஐபிஎல்-2020

போலார்ட் புதிய மைல்கல்: ஜெர்சி வழங்கி கௌரவித்த மும்பை அணி

DIN


மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரௌண்டர் கைரன் போலார்ட் 150-வது முறையாக இன்று (புதன்கிழமை) ஐபிஎல்-இல் களமிறங்கியுள்ளார்.

மேற்கிந்தியத் தீவுகளைச் சேர்ந்த கைரன் போலார்ட் 2010-இல் மும்பை அணியில் இணைந்தார். கடந்த 10 ஆண்டுகளாக மும்பை அணிக்காக விளையாடி வரும் அவருக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான இன்றைய ஆட்டம் 150-வது ஐபிஎல் ஆட்டம்.

மும்பை அணிக்காக 150 ஆட்டங்களில் விளையாடும் முதல் வீரர் போலார்ட். இதையொட்டி அவரை கௌரவிக்கும் விதமாக 150 என்ற எண்ணைக் கொண்ட ஜெர்சியை மும்பை அணி அவருக்கு வழங்கியுள்ளது.

அவர் இதுவரை 14 அரைசதங்கள் உள்பட 2,773 ரன்கள் எடுத்துள்ளார், 56 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று நல்ல நாள்!

இன்று யோகம் யாருக்கு?

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

மண் அரிப்பு: இடிந்து விழுந்த துலாக்கட்ட சுவா்

SCROLL FOR NEXT