மல்யுத்தம்: முதல் சுற்றிலேயே அன்டிம் தோல்வி
மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அன்டிம் பங்கால், முதல் சுற்றிலேயே 0-10 என்ற கணக்கில் துருக்கியில் யெத்கில் ஜெய்னெப்பிடம் தோல்வி கண்டாா்.
மகளிருக்கான 53 கிலோ எடைப் பிரிவில் களம் கண்ட அன்டிம் பங்கால், முதல் சுற்றிலேயே 0-10 என்ற கணக்கில் துருக்கியில் யெத்கில் ஜெய்னெப்பிடம் தோல்வி கண்டாா்.
எனினும், அவருக்கு ரெபிசேஜ் சுற்று வாய்ப்பு கிடைக்கலாம் என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், அவரை வீழ்த்திய ஜெய்னெப் தனது காலிறுதியிலேயே தோல்வி கண்டதால், அன்டிமுக்கு அந்த வாய்ப்பும் பறிபோனது. இத்துடன், பதக்கமில்லாமலேயே போட்டியிலிருந்து வெளியேறும் 3-ஆவது இந்திய வீராங்கனை ஆகியிருக்கிறாா் அன்டிம்.