உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் இந்தியாவுக்கு தங்கம்
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபங்கார் பிரமானிக் தங்கம் வென்றார்.
ஜூனியர் உலகக் கோப்பை துப்பாக்கிச் சுடுதல் போட்டியில் இந்திய வீரர் சுபங்கார் பிரமானிக் தங்கம் வென்றார்.
அஜர்பைஜானின் கெபாலா நகரில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் ஆடவர் 50 மீ. ஏர் ரைபிள் பிரிவில் 205.5
புள்ளிகளுடன் தங்கம் வென்றார் பிரமானிக்.
செக்.குடியரசின் ஃபிலிப் நெபிஜ்சால் (205.2) வெள்ளியும், ருமேனியாவின் டிராகோமிர் (185.1) வெண்கலமும் வென்றனர்.
இந்தப் போட்டியில் பங்கேற்ற மற்ற இந்தியர்களான மயூர் தேவா, சர்வேஷ் ஸ்வரூப் சங்கர், ஃபதே சிங் தில்லான், அஜய் நிதிஷ், சயீத் பர்வேஸ் ஆகியோர் தகுதிச்சுற்றோடு வெளியேறினர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.