செய்திகள்

தேசிய ஷாட்கன் போட்டி: மானவ்ஜித், ஷ்ரேயாஸி முன்னேற்றம்

DIN

தில்லியில் நடைபெறும் 61-ஆவது தேசிய ஷாட்கன் சாம்பியன்ஷிப் போட்டியின் முதல் நாளில் மானவ்ஜித் சிங், ஷ்ரேயாஸி சிங் ஆகியோர் தங்களது பிரிவில் முதலிடம் பிடித்தனர்.
இதில் ஆடவருக்கான டிராப் பிரிவில் மானவ்ஜித் 49 புள்ளிகளுடன் முதலிடமும், அமன் அலி எலாஹி அதே புள்ளிகளுடன் 2-ஆவது இடமும், கினான் செனாய் 48 புள்ளிகளுடன் மூன்றாவது இடமும் பிடித்தனர். இதில் மானவ்ஜித் சிங் ஓராண்டுக்குப் பிறகு போட்டியில் களம் காண்பது குறிப்பிடத்தக்கது. இப்போட்டியில் மொத்தம் 207 பேர் பங்கேற்றனர்.
மகளிர் டிராப் பிரிவில் ஷ்ரேயாஸி சிங் 25 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்தார். சிக்கா பதாவ்ரியா 22 புள்ளிகளுடன் 2-ஆவது இடமும், பஞ்சாபின் ராஜேஸ்வரி குமாரி 21 புள்ளிகளுடன் 3-ஆவது இடமும் பிடித்தனர். இப்பிரிவில் மொத்தம் 43 பேர் போட்டியிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செந்தூரில் மே 22இல் வைகாசி விசாகம்

உடல் பருமன் குறைப்பு சிகிச்சையில் இளைஞா் உயிரிழப்பு: மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்க முதல்வரிடம் வலியுறுத்தல்

மண்டல பனைபொருள் பயிற்சி நிலையத்தில் பதநீா் விற்பனை

அரியாங்குப்பம் கோயில் திருவிழா கொடியேற்றம்

ஜெயராக்கினி அன்னை ஆலய ஆண்டுப் பெருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT