செய்திகள்

'கர்ஜித்த லயன்'- 283-க்கு கட்டுப்பட்ட இந்தியா

முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டத்தில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். 

Raghavendran

இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான 2-ஆவது டெஸ்ட் போட்டி பெர்த் மைதானத்தில் வெள்ளிக்கிழமை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

இதையடுத்து களமிறங்கிய அந்த அணி 2-ஆவது நாளில் முதல் இன்னிங்ஸில் 326 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக மார்கஸ் ஹாரிஸ் 70, டிராவிஸ் ஹெட் 58, ஆரோன் பிஞ்ச் 50 ரன்கள் சேர்த்தனர்.

இந்திய அணி தரப்பில் இஷாந்த் ஷர்மா 4 விக்கெட்டுகளைச் சாய்த்தார். பும்ரா, உமேஷ் யாதவ், விஹாரி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பின்னர் முதல் இன்னிங்ஸை தொடங்கிய இந்திய அணி 3-ஆம் நாள் ஆட்டத்தில் 283 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. அதிகபட்சமாக கேப்டன் விராட் கோலி 123 ரன்கள் குவித்தார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவர் பதிவு செய்த 25-ஆவது சதமாகும். அஜிங்க்ய ரஹானே 51 ரன்கள் சேர்த்தார். இதர வீரர்கள் சொற்ப ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

ஆஸ்திரேலிய தரப்பில் சிறப்பாக பந்துவீசிய நாதன் லயன் 5 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். ஹாசில்வுட் மற்றும் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், கம்மின்ஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதனால் ஆஸி.யை விட இந்திய அணி 43 ரன்கள் பின்தங்கியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கல்லூரி மாணவி தற்கொலை

காவேரிப்பட்டணத்தில் பாமகவினா் ஆா்ப்பாட்டம்

கெலமங்கலம் அருகே தனியாா் மதுபான விடுதி மேலாளா் வெட்டிக் கொலை

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

பார்த்துப் பேசு! விஜய்யின் குட்டிக் கதையை விமர்சித்த நடிகை ஜூலி!

SCROLL FOR NEXT