செய்திகள்

ஐபிஎல்: கொல்கத்தா அணிக்கு சென்னை 178 ரன்கள் வெற்றி இலக்கு நிர்ணயிப்பு 

கவியழகன்

கொல்கத்தா: ஐபிஎல்லில் வியாழன் அன்று நடைபெறும் போட்டியில் கொல்கத்தா அணிக்கு சென்னை அணி 178 ரன்களை  வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது.

ஐபிஎல் தொடரின் 33-வது லீக் ஆட்டம் கொல்கத்தா ஈடன் கார்டன்ஸ் மைதானத்தில் வியாழன் இரவு 8 மணிக்கு துவங்கியது. இதில் டாஸ் வென்ற கொல்கத்தா அணியின் தலைவர் தினேஷ் கார்த்திக் சென்னை அணியினை பேட்டிங் செய்யுமாறு கேட்டுக் கொண்டார்.

முதலில் களமிறங்கிய சிஎஸ்கே ஆட்டத்தின் முதல் 15 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்துள்ளது. டுபிளாசி 27, ஷேன் வாட்சன் 36, சுரேஷ் ரெய்னா 31 மற்றும்  ராயுடு 21 ரன்களுக்கு ஆட்டமிழந்தனர்.

பின்னர் ஜடேஜாவுடன் சேர்ந்த சென்னை அணியின் தலைவர் தோனி தன்னால் இயன்ற அளவு சிறப்பாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.   அவர் 25 பந்துகளில் 43 ரன்களைக் குவித்தார். அதே நேரம் கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக பந்து வீசி சென்னையின் அதிரடியைக் கட்டுப்படுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காந்தி குடும்பத்தின் 4 தலைமுறையும் அரசியலமைப்பை அவமதித்துள்ளது: மோடி

தடுப்பணை திட்டங்களை கிடப்பில் போட்ட திமுக: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு

‘சிந்தனைகள் தடுமாறும் நேரமிது..’

தங்கம் புதிய உச்சம்: ரூ.55,000-ஐ கடந்தது!

இந்தியன் - 2 புதிய போஸ்டர்!

SCROLL FOR NEXT