சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ள தென் ஆப்பிரிக்க வீரர் ஏபி. டி வில்லியர்ஸுக்கு இந்திய கேப்டன் விராட் கோலி பிரியாவிடை அளித்துள்ளார்.
விராட் கோலியும், டி வில்லியர்ஸும் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக இணைந்து பல ஆண்டுகளாக விளையாடி வருகின்றனர்.
இதுதொடர்பாக தனது கட்டுரையில் அவர் கூறியுள்ளதாவது:
சகோதரனே உனது வாழ்க்கையில் மேலும் சிறப்புகள் பெற வாழ்த்துகிறேன். சர்வதேச கிரிக்கெட்டில் பேட்டிங் முறையையே மாற்றி அமைத்தாய். உனக்கும், உனது குடும்பத்தினருக்கும் என நல்வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளார்.
அதிரடி பேட்ஸ்மேனான டி வில்லியர்ஸ் கிரிக்கெட்டின் அனைத்து வகையான ஆட்டங்களில் 14 ஆண்டுகள் நெடிய பயணத்துக்கு பின் ஓய்வு பெறுவதாக கடந்த வாரம் அறிவித்தார். 114 டெஸ்ட்களில் 22 சதங்களுடன் 8765 ரன்களையும், 228 சர்வதேச ஒருநாள் போட்டிகளில் 25 சதங்களுடன் 9577 ரன்களையும், 78 டி 20 கிரிக்கெட் போட்டிகளில் 10 அரை சதங்களுடன் 1672 ரன்களையும் வில்லியர்ஸ் அடித்துள்ளார்.
விக்கெட்-கீப்பராகவும் ஆடியுள்ள அவர் 463 கேட்ச்கள், 17 ஸ்டம்பிங்குகளும் புரிந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.