ஏடிபி பைனல்ஸ் ஒரு பகுதியாக நடைபெற்ற திங்கள்கிழமை இரவு நடைபெற்ற ஆட்டத்தில் உலகின் நம்பர் ஒன் வீரர் ஜோகோவிச் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை நொறுக்கினார்.
உலகின் தலைசிறந்த 8 டென்னிஸ் வீரர்கள் ஆண்டின் இறுதியில் மோதும் பிரபல டென்னிஸ் போட்டி ஏடிபி பைனல்ஸ் ஆகும். இப்போட்டி தற்போது லண்டனில் நடைபெற்று வருகிறது.
முதல் ஆட்டத்தில் மூன்றாம் நிலை வீரர் பெடரர் அதிர்ச்சித் தோல்வியடைந்தார். இதற்கிடையே தற்போது அபார பார்மில் உள்ள ஜோகோவிச் 6-4 6-3 என்ற நேர் செட்களில் அமெரிக்க வீரர் ஜான் ஐஸ்நரை எளிதாக வீழ்த்தினார். மற்றொரு ஆட்டத்தில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் வெரேவ் 7-6, 7-6 என குரோஷியாவின் மரின் சிலிக்கை போராடி வென்றார்.