செய்திகள்

ஆந்திராவுக்கு எதிரான ரஞ்சி ஆட்டம்: தமிழ்நாடு 122/3

எழில்

ஆந்திரம்-தமிழகம் இடையிலான ரஞ்சி கோப்பை ஆட்டம் ஆந்திராவின் ஓங்கோலில் நேற்று தொடங்கியது. நேற்று ஆந்திரம் 198/8 ரன்களை மட்டுமே எடுத்தது. தமிழக வேகப்பந்து வீச்சாளர் முகமது 4, சுழற்பந்து வீச்சாளர் சாய் கிஷோர் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர். 

இந்நிலையில் இன்று தனது முதல் இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆந்திர அணி, 84.4 ஓவர்களில் 216 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. கிரிநாத் ரெட்டி 86 ரன்கள் எடுத்து கடைசிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். முகமது 4, நடராஜன் 3, சாய் கிஷோர் 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தினார்கள். 

இதன்பிறகு தனது முதல் இன்னிங்ஸை விளையாடிய தமிழக அணி 2-ம் நாள் முடிவில் 50 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 122 ரன்கள் எடுத்துள்ளது. அபரஜித் 27, ஜெகதீசன் 8 ரன்களுடன் களத்தில் உள்ளார்கள். தமிழக அணி, 7 விக்கெட்டுகள் மீதமுள்ள நிலையில் 94 ரன்கள் பின்தங்கியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

8 வாக்குச் சாவடிகளில் மறுதோ்தல் நடத்த வலியுறுத்தி நீதிமன்றத்தில் வழக்கு

குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா ஆலோசனைக் கூட்டம்

திருப்பத்தூரில் வெப்ப அலைகள் குறித்த ஆலோசனை கூட்டம்

பந்துவீச்சில் அசத்திய பெங்களூரு; 147 ரன்களுக்கு ஆட்டமிழந்த குஜராத் டைட்டன்ஸ்!

ஐஜிஐ மெட்ரோ நிலையம், பள்ளியில் பாதுகாப்பு ஒத்திகைப் பயிற்சி

SCROLL FOR NEXT