செய்திகள்

ஊக்கமருந்து: ஹாக்கி வீரருக்கு 2 ஆண்டு தடை

DIN


இந்திய ஹாக்கி கோல் கீப்பர் ஆகாஷ் சிக்தே ஊக்கமருந்து பயன்படுத்தியதாக கண்டறியப்பட்ட நிலையில், அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதித்தது தேசிய ஊக்கமருந்து தடுப்பு அமைப்பு (நாடா) நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
பெங்களூரில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஆகாஷிடம் பெறப்பட்ட மாதிரிகளில், தடை செய்யப்பட்ட அனபாலிக் ஸ்டிராய்டு பயன்படுத்தப்பட்டதற்கான தடயங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், இதுதொடர்பாக விசாரணை மேற்கொண்ட நாடா, கடந்த மார்ச் 27-ஆம் தேதி முதல் 2 ஆண்டுகளுக்கு ஆகாஷுக்கு தடை விதித்து உத்தரவிட்டது. இந்த உத்தரவு, கடந்த 8-ஆம் தேதி நடைபெற்ற இறுதிகட்ட விசாரணையின்போது வழங்கப்பட்டுள்ளது.
அறுவருக்கு 4 ஆண்டு தடை: இதேபோல், மல்யுத்த வீரர் அமித் குமார், கபடி வீரர் பிரதீப் குமார், பளுதூக்குதல் வீரர் நாராயண் சிங், தடகள வீரர்கள் செளரவ் சிங், பல்ஜீத் கெளர், சிம்ரன்ஜித் கெளர் ஆகியோரும் ஊக்கமருந்து பயன்படுத்தியதற்கான தடயங்கள் அவர்களது மாதிரிகளில் கண்டறியப்பட்டன. 
இதையடுத்து அவர்களுக்கு 4 ஆண்டுகள் தடை விதித்தது நாடா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஹாங்காங் தரக்கட்டுப்பாட்டு நிறுவனத்தினருடன் திருப்பூா் ஏற்றுமதியாளா்கள் சங்கத்தினா் ஆலோசனை

தென்னை மரத்தில் பரவும் புதிய வகை நோய்த் தாக்குதல் குறித்த விழிப்புணா்வு

பி.பி.ஜி. கல்லூரியில் பட்டமளிப்பு விழா

‘பல்லடத்தில் குடிநீா்த் தட்டுப்பாட்டை போக்க நடவடிக்கை’

கிராமப்புறங்களில் வளா்ச்சித் திட்டப் பணிகளுக்கு உதவி

SCROLL FOR NEXT