சிங்கப்பூர் மாஸ்டர்ஸ் பாட்மிண்டன் போட்டி அரையிறுதிச் சுற்றில் ஜப்பான் வீராங்கனை நúஸாமி ஒகுஹராவிடம் சரண் அடைந்தார். இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரம் பி.வி.சிந்து.
சனிக்கிழமை நடைபெற்ற அரையிறுதி ஆட்டத்தில் 7-21, 11-21 என்ற கேம் கணக்கில் ஒகுஹராவிடம் எளிதில் வீழ்ந்தார் சிந்து.
கடைசியாக நடைபெற்ற 2 ஆட்டங்களில் சிந்து வென்றிருந்த நிலையில், இந்த ஆட்டத்தில் எதிர்ப்பே இன்றி சரண் அடைந்தது குறிப்பிடத்தக்கது.
இறுதிச் சுற்றில் தைபேயின் டை சூ யிங்குடன் மோதுகிறார் ஒகுஹரா.