செய்திகள்

பயிற்சியாளரை பிரிந்தார் முதல்நிலை வீராங்கனை ஒஸாகா

DIN


உலகின் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான ஜப்பானின் நவோமி ஒஸாகா தனது பயிற்சியாளர் சாஸ்சா பஜினை விட்டு பிரிந்தார்.
கடந்த ஆண்டு  யுஎஸ் ஓபனில் இறுதிச் சுற்றில் செரீனா வில்லியம்ஸை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற ஒஸாகா தற்போது, கடந்த மாதம் ஜனவரியில் நடைபெற்ற ஆஸ்திரேலிய ஓபன் போட்டி இறுதிச் சுற்றிலும், செக்.குடியரசின் பெட்ரோ குவிட்டோவாவை வீழ்த்தி பட்டம் வென்றார். 
இதன் மூலம் 2 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்ற ஜப்பான் வீராங்கனை என்ற சாதனையை படைத்தார். தற்போது உலகின் நம்பர் ஒன் வீராங்கனையாக உள்ளார் ஒஸாகா.
இந்நிலையில் ஆஸி. ஓபன் முடிவுற்ற 17 நாள்களில் ஒஸாகா தனது பயிற்சியாளர் சாஸ்சா பஜினை விட்டு பிரிந்ததாக அறிவித்துள்ளார்.இனிமேல் நான் சாஸ்சாவுடன் இணைந்து பணிபுரிய போவதில்லை. அவருக்கு நல்ல எதிர்காலம் கிடைக்க வாழ்த்துகிறேன் எனத் தெரிவித்தார்.
இதற்கு பதிலளித்த பஜின் நன்றி நவோமி, சிறப்பாக இருவரும் பயணித்தோம். வாழ்த்துகள் எனக் கூறியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கமுதியில் தமுமுக சாா்பில் இலவச மருத்துவ முகாம்

திருவடிமதியூா் அமல அன்னை ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசி விசாக திருவிழா: வெள்ளி ரிஷப வாகனத்தில் சுவாமி வீதி உலா

காா் மோதியதில் பெண் பலி

திண்டுக்கல் மாநகராட்சி எல்லை விரிவாக்கம்: ஊராட்சிகள் பட்டியல் மாற்றத்தால் குழப்பம்!

SCROLL FOR NEXT