செய்திகள்

மேலும் ஒரு வேகப்பந்து வீச்சாளர் இந்திய அணிக்கு தேவை: கம்பீர்

DIN


உலகக் கோப்பை தொடருக்காக அறிவிக்கப்பட்டுள்ள இந்திய அணியில்,  மேலும் ஒரு வேகப்பந்துவீச்சாளர் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் கம்பீர் தெரிவித்தார். 
அவர் மேலும் கூறியதாவது: பும்ரா, ஷமி, புவனேஸ்வர் குமார் ஆகியோருக்கு மேலும் பக்கபலமாக இன்னெரு வேகப்பந்து வீச்சாளரும் தேவை என்று கருதுகிறேன். ஹார்திக் பாண்டியா, விஜய் சங்கர் ஆகியோர் பந்துவீசுவார்கள் என்றாலும் என்னால் சமாதானம் அடைய முடியவில்லை. உலகக் கோப்பை தொடரில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூஸிலாந்து ஆகிய அணிகள் இந்தியாவுடன் மோதும் ஆட்டங்களை காண்பேன் என்றார் கம்பீர்.
இவர், பாஜக சார்பில் கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதியில் வேட்பாளராக களம் இறங்கியுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விவசாயிக்கு வேளாண்மை கல்லூரி மாணவா்கள் செயல்விளக்கம்

ஆலங்குளம் அருகே மொபெட் - டிராக்டா் மோதல்: தொழிலாளி பலி

சங்கரன்கோவிலில் பள்ளி வாகனங்கள் ஆய்வு

குற்றாலத்தில் சிலம்பாட்ட வல்லுநா்களுக்கு நடுவா் புத்தாக்க பயிற்சி முகாம்

கடையநல்லூா்: குடிநீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டுகோள்

SCROLL FOR NEXT