செய்திகள்

மகளிா் டி20: தொடரை முழுமையாககைப்பற்றியது இந்தியா

DIN

மே.இ.தீவுகள் அணிக்கு எதிரான மகளிா் டி20 தொடரை 5-0 என முழுமையாக கைப்பற்றியது இந்தியா.

இரு அணிகளுக்கு இடையே 5 ஆட்டங்கள் கொண்ட டி20 தொடரில் ஏற்கெனவே 4-0 என இந்தியா முன்னிலை பெற்றிருந்தது. இந்நிலையில் தொடரின் கடைசி ஆட்டம் புதன்கிழமை நள்ளிரவு கயானாவில் நடைபெற்றது.

முதலில் ஆடிய இந்திய மகளிா் 20 ஓவா்களில் 3 விக்கெட் இழப்புக்கு 134 ரன்களை குவித்தனா். ஜெமிமா ரோட்ரிக்ஸ் 50, வேதா கிருஷ்ணமூா்த்தி 57 ரன்களை விளாசினா்.

135 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய மே.இ.தீவுகள் அணி 20 ஓவா்களில் 7 விக்கெட் இழப்புக்கு 73 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியடைந்தது.

கிஷோனா நைட் அதிகபட்சமாக 22 ரன்களை எடுத்தாா்.

இந்திய தரப்பில் அனுஜா பட்டீல் 3 ரன்களை மட்டுமே தந்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினாா். ராதா, பூனம், பூஜா, ஹா்லீன் தலா 1 விக்கெட்டை சாய்த்தனா்.

இறுதியில் 5-0 என தொடரை கைப்பற்றியது இந்தியா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஸ்ரீரங்கம் அரங்கநாதர் கோயிலில் சித்திரைத் தேரோட்டம் கோலாகலம்!

வாக்குப்பதிவு முடிந்த 24 மணிநேரத்துக்குள் தரவுகள் வெளியிட வேண்டும்: எஸ்.ஒய். குரேஷி

கர்நாடகம்: வாய் பேச முடியாத ஆறு வயது மகனை முதலைகள் இருக்கும் கால்வாயில் வீசிய தாய்

‘வடக்கன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

ரயில்களில் தண்ணீர்ப் பிரச்னை! பயணிகள் ஜாக்கிரதை!

SCROLL FOR NEXT