ஒளிபரப்பில் வரலாறு படைத்த இந்தியா, பாகிஸ்தான் ஆட்டம்
தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் புதிய வரலாறு படைத்துள்ளது.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கிரிக்கெட் ஆட்டம் புதிய வரலாறு படைத்துள்ளது.
2019 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடர் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதையடுத்து தொலைக்காட்சிகளில் இதன் ஒளிபரப்பை காணும் ரசிகர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது.
குறிப்பாக முதல் 3 வாரங்களில் மட்டும் 367 மில்லியன் பார்வையாளர்களை பெற்றுள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது. அதிலும் சராசரியாக 303 மில்லியன் பார்வையாளர்கள் பார்த்து வருவதாக கணக்கிடப்பட்டுள்ளது.
Advertisement
Advertisement
இந்நிலையில், 2019 உலகக் கோப்பையிலேயே இதுவரையிலான ஆட்டங்களில் இந்தியா, பாகிஸ்தான் போட்டி தான் உலக கிரிக்கெட் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்பட்டது தெரியவந்துள்ளது.
இந்தப் போட்டியை தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் இந்தியாவில் மட்டும் 206 மில்லியன் பார்வையாளர்கள் கண்டு ரசித்துள்ளதாக ஸ்டார் நிறுவனம் தெரிவித்துள்ளது.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.