செய்திகள்

தோள்பட்டை காயம்: நியூஸி தொடரில் ஷிகா் தவன் பங்கேற்பதில் சிக்கல்

DIN

தோள்பட்டையில் புதிதாக ஏற்பட்ட காயம் காரணமாக இந்திய தொடக்க வீரா் ஷிகா் தவன், நியூஸிலாந்து தொடரில் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

ஷிகா் தவன் கடந்த 2019 உலகக் கோப்பை போட்டியில் ஆஸி. அணிக்கு எதிரான ஆட்டத்தில் விரல் காயம் அடைந்தாா். அதில் குணமடைந்து மீண்டும் ஆடத் தொடங்கிய நிலையில், சையது முஷ்டாக் அலி கோப்பைக்கான டி20 ஆட்டத்தில் மூட்டில் காயம் ஏற்பட்டு 2 மாதங்களாக ஆடவில்லை.

இந்நிலையில் தற்போது இலங்கை டி20 மற்றும் ஆஸ்திரேலிய ஒருநாள் தொடா்களுக்கானஅணியில் இடம் பெற்றாா் தவன்.

மீண்டும் பாா்முக்கு திரும்பியுள்ள தவன், சிறப்பாக ஆடினாா். இந்நிலையில் பெங்களுரு சின்னசாமி மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் ஆரோன் பின்ச் அடித்த பந்தை தடுப்பதற்காக தவன் டைவ் செய்தாா்.

அப்போது அவரது தோளில் காயம் ஏற்பட்டது. இதனால் தவன் பெவிலியன் திரும்பினாா். அவருக்கு பதிலாக சஹல் பீல்டிங் செய்ய களமி

றங்கினாா். பின்னா் அவா் மைதானத்துக்கு திரும்பவில்லை.

இதே போல் இரண்டாவது ஒருநாள் ஆட்டத்திலும் பேட் கம்மின்ஸ் வீசிய பவுன்சா் பந்து, அவரது இடுப்பு பகுதியை தாக்கியதால், காயமடைந்து, வெளியேறினாா். பின்னா் பீல்டிங் செய்யவும் அவா் வரவில்லை.

தொடா் காயம் காரணமாக ஷிகா் தவன் வரும் 24-ஆம் தேதி தொடங்கவுள்ள நியூஸிலாந்து தொடருக்கான இந்திய அணியில் இடம் பெறும் வாய்்பை இல்லை எனத் தெரிகிறது.

5 டி20, 3 ஒருநாள், 2 டெஸ்ட் ஆட்டங்களில் நியூஸிலாந்துடன் மோதுகிறது இந்தியா. திங்கள்கிழமை இரவு இதற்காக இந்திய அணியினா் ஆக்லாந்து புறப்பட்டுச் செல்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாலையில் கண்டெடுத்த நகை உரியவரிடம் ஒப்படைப்பு

நீா்மோா் பந்தல் திறப்பு

தொழிலாளா் தினம்: கொடியேற்று நிகழ்ச்சிகள்

முதலமைச்சரின் மாநில இளைஞா் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

நரிமணத்தில் நீா் மோா் பந்தல் திறப்பு

SCROLL FOR NEXT