செய்திகள்

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து இரு பிரபல பாகிஸ்தான் வீரர்கள் விலகல்

DIN

இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்திலிருந்து முகமது அமிர், ஹாரிஸ் சோஹைல் ஆகிய இரு பாகிஸ்தான் வீரர்களும் விலகியுள்ளார்கள்.

இங்கிலாந்து - மே.இ. தீவுகள் ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடர் ஜூலை 8 முதல் தொடங்குகிறது. ஜூலை 28 அன்று டெஸ்ட் தொடர் முடிவடைகிறது. கரோனா அச்சுறுத்தல் காரணமாக மூன்று டெஸ்டுகளும் காலி மைதானத்தில் நடைபெறும் என இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது

இதையடுத்து பாகிஸ்தான் அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செல்லவுள்ளது. இதில் சொந்தக் காரணங்களால் தங்களால் கலந்துகொள்ள முடியவில்லை என வேகப்பந்துவீச்சாளர் முகமது அமிர், பேட்ஸ்மேன் ஹாரிஸ் சோஹைல் ஆகியோர் தெரிவித்துள்ளார்கள்.

ஆகஸ்ட் மாதம் அமிரின் 2-வது குழந்தை பிறக்கவுள்ளது. குடும்பச் சூழல் காரணமாக சோஹைலாலும் இங்கிலாந்துச் சுற்றுப்பயணத்தில் கலந்துகொள்ள முடியவில்லை. 28 வீரர்களும் 14 பயிற்சியாளர்கள் உள்ளிட்ட நிர்வாகிகளும் இங்கிலாந்துக்குச் செல்வார்கள். தொடர்களுக்கான பாகிஸ்தான் அணி விரைவில் அறிவிக்கப்படும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.

ஆகஸ்ட் - செப்டம்பர் மாதங்களில் இங்கிலாந்தில் 3 டெஸ்ட், 3 டி20 ஆட்டங்களில் பாகிஸ்தான் அணி விளையாடவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மும்பை இந்தியன்ஸ் அணியில் ஒற்றுமையில்லை: முன்னாள் ஆஸி. கேப்டன்

மோடி ஏன் கைது செய்யப்பட வேண்டும்? வைரல் குறிச்சொல் பின்னணி!

நிர்மலா தேவிக்கு 10 ஆண்டுகள் சிறை!

அன்பே அனா டி அர்மாஸ்!

முத்தையா இயக்கத்தில் விஷால்?

SCROLL FOR NEXT